Sunday, January 1, 2017

2017!!!

யாது மாகி நின்றாய் -- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்

போதும் இங்கு மாந்தர் -- வாழும்
பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்

கர்ம யோக மொன்றே -- உலகில்
காக்கு மென்னும் வேதம்

தர்ம நீதி சிறிதும் -- இங்கே
தவற லென்ப தின்றி

மர்ம மான பொருளாம் -- நின்றன்
மலர டிக்கண் நெஞ்சம்

செம்மை யுற்று நாளும் -- சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.


 - பாரதி

No comments: