Tuesday, November 1, 2016

எழுதாமல் போவேனோ?

"விநாயகச்சதுர்த்தியில் செயல்கள் தொடங்கி கேள்விப்பட்டிருக்கிறேன், நிறுத்திக் கேள்விப்படவில்லை, ஏன் இந்த மௌனம்" என்ற கேள்வி நண்பர்களிடமிருந்து வருவது மகிழ்ச்சியென்றால் எழுத நினைத்தும் எழுதாதது வருத்தம்!

அகடும் முகடுமாக மாறி மாறி ஓடும் காலஓட்டத்தில், விரும்பியவற்றுக்கு 30 நிமிடம் ஒதுக்க இயலாமல் அல்லாடும் காலகட்டம் இது!! காப்பியங்களின் அரசிகள் முதல் கார்பன் துகள் வரை, எழுதநினைத்ததைக் குறித்துவைத்த பக்கங்கள் ஒன்று பலவானது! அஞ்ஞாதவாசம் முதல் உபவாசம் வரை எழுத ஆரம்பித்து முடிக்காத கட்டுரைகள் ஒருகையளவு தேறும்வைரமுத்துவின் "தமிழுக்கும் நிறம் உண்டு" முதல் ஜே டி க்ரூஸின் "கொற்கை" வரை வாங்கிவைத்தும் திருப்பாத பக்கங்களும் பலவானது! Asimov-ன் புத்தகங்களும் அவ்வையின் புத்தகங்களும் ஒரே வரிசையில் உறங்குகின்றன ஒரு சில மாதங்களாய்!தொலைபேசியில் சில எண்கள் மறைந்தே போயினபோலும்! பேசாமல்விட்ட  நண்பர்களும் உறவினர்களும் பொறுமை காப்பதால் இன்னும் அவ்வப்போது பண்டிகைகளுக்கான வாழ்த்துகள் வருகின்றன!


வருடத்தின் மீதி நாளில் எழுதாமல் போவேனோ என்ற எண்ணமே கசக்கிறது! ஆனால் 2017ல்தான் புதுகணக்கு தொடங்கக்கூடும் அதுவரை குறிப்புகள் மட்டுமே கைகூடும்போல் தெரிகிறது! பார்ப்போம்!! எத்தனை நாள் எழுதாமல் தாக்குபிடிக்கமுடிகிறதென்று!!!

No comments: