Saturday, June 22, 2024

அமையாது உலகு

கேள்விகளே நம்மை வழிநடத்துகின்றன!!! எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கொஞ்சம் மங்கித்தான் போய்விடும் போலும். கொஞ்சம் குறைவதென்ன... கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல்  போய்விடும்... 

கேள்விகளே இல்லாமல்கூட உலகம் இருக்க முடியுமா என்பதே ஒரு கேள்விதான்

விடை தெரியாத வினாக்கள் கொடுக்கும் தேடல், விடை தெரிந்தவுடன் கிடைக்கும் நிறைவை  விட, கோடி பெறும். நிறைவு தேவைதான் ஆனால் தேடலே ருசிக்கிறது. ஒரு வேளை, மனம் முழுதும் ஓய்ந்து ஒரு மோன நிலை வரும் போது நிறைவு மட்டும் போதுமாய் இருக்கலாம். 

ஏன் இப்படி என்றோ, ஏன் இப்படி இருக்கக் கூடாதென்றோ கேட்டு அறிவு  வளர்ப்பது மட்டுமல்லாமல், எது சரி என்று கேட்டு அறம் காப்பதுவும் கேள்விதானே. விஞ்ஞானம் மட்டுமின்றி   மெய்ஞானமும் கேள்வியின் மேலே எழுந்ததாகத்தானே இருக்க வேண்டும்!!

நீரின்றி அமையாது உலகு என்பது பாதி சரி... கேள்வியின்றியும் அமையாது உலகு....   

கேள்விப் பெருங்கணைகளே பெருந்துணைகளாக நகர்ந்து செல்கிறது வாழ்க்கை நதி...

No comments: