Monday, March 19, 2012

சமன் செய்து சீர் தூக்கும் கோல்கள்

பலமுறை ஆலோசித்து அதன் பின்பே திரையரங்கு செல்வோம். குறுந்தகட்டின் மூலமோ இணையதளங்கள் மூலமோ பார்ப்பதில்லை. அதனால், ஒரு வருடத்தில் நான் பார்க்கும் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், அதுவும் ஒரு கை விரலில்!!!

அரவானைப் பார்த்து வந்த நண்பர்களுக்குள் தீவிர கருத்து வேறுபாடுகள். களவைத் தொழிலாகக்கொண்ட பாலைநிலத்து மக்களை தமிழ் இலக்கண பாடத்தில் படித்ததோடு மறந்தேபோயிருந்தது. அவர்கள் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்ற யோசனையுடன்தான் சென்றேன். கதைக்களமும் கதை சொன்ன விதமும், கதை சொல்லும் கருத்தும் வாழ்வின் வேறொரு தளத்துக்கு என்னைக் கொண்டுசென்றதாகவே உணர்கிறேன்.

கலீல் ஜிப்ரனின் கவிதையொன்று! போர் என்ற தலைப்பில் வெகு காலத்திற்கு முன் படித்தது; திருடன் ஒருவனது கண் நெசவாளன் வீட்டில் திருடச் சென்ற இடத்தில் தறியில் பட்டு குருடாகிவிடும். இந்த வழக்கை விசாரித்த மன்னன் நெசவாளன் கண்ணைப் பறிக்கச் சொல்லி உத்தரவிடுவான். தறியின் இரு ஓரங்களையும் பார்ப்பதற்காக தனக்கு இரு கண்களும் வேண்டும் என்றும், தனது பக்கத்து வீட்டில் வாழும் செருப்பு தைப்பவனுக்கு தொழில் செய்ய இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் நெசவாளி முறையிடுவான். மன்னனும் அந்த 'நியாயமான' வாதத்தைக் கேட்டு செருப்பு தைப்பவனது கண்ணைக் குருடாக்க உத்தரவிடுவான். நீதி நிலை நாட்டப் பெற்றதாக நாடு மன்னனைக் கொண்டாடும்.

நல்ல கவிதை ரசிக்கவைக்கும்; வாசித்த பின் சிந்திக்கவைக்கும்; பல நாட்களுக்கு ஏன் பல வருடங்களுக்குப்பின்னும் மனதில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது நினைவலைகளில் படகோட்டும்; நமது சிந்தனைகளின் ஓட்டத்தையே மாற்றிக்காட்டும்

அரவானைப் பார்த்து 24 மணி நேரம் முடிந்தாலும் கலீல் ஜிப்ரனின் இந்த வரிகளும், சின்னானின் மரணமும், பாளையக்காரனது தீர்ப்பும், வன்மமும், இமையை உறுத்தும் துரும்பாக, எந்த வேலை செய்தாலும் மனதின் அடியில் ஊடறுத்து ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இது போல எத்தனை முறை நீதி நிலை நாட்டப்பெற்றிருக்கிறது இப்புவியில்!!! சமன் செய்து சீர் தூக்கும் கோல்கள்தான் எத்தனை எத்தனை!!!

Friday, January 20, 2012

ஓடிப் போன புத்தர்கள்

நான் ஒரு process consultant. Project Manager - ஆக இருந்து process consultant ஆக மாறியவள். எப்படி ஒரு மென்பொருளை உருவாக்குவது என்று பிற மேலாளர்களுக்கும் கணிப்பொறியியலாளர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் பணி. மென்பொருள் மேலாளராக இருப்பதை விட இந்த பணி சில விதங்களில் சிரமமானது என்றாலும், பல விதங்களில் எளிது.

சில நாட்களுக்கு முன்னால் புத்தரின் வாழ்க்கையைப்பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கையின் வெப்பம் தாளாது குடும்பத்தை விட்டோடி அதன் பின் எப்படி நல்ல விதமாக வாழ்வது என்று உபதேசித்தார் என்பதைப் படித்தபோது எனக்கு ஏனோ process consultants-ன் நினைவு வந்தது!!!

Saturday, December 24, 2011

Two months of silence

I did not write for exactly two months. It is not just because I was busy in other things. But it is also because I wanted to avoid making judgements of the happenings around me. 

But I do not think I have succeeded a bit :-) It is just that I had not put it on writing; I had made judgements mentally; even after great efforts not do it, I had shared my judgements orally. 

I am wondering, if anyone can communicate to another person, without making judgements!!! Most of the communications we (not only me) make are around the judgements we make. It need not be dissatisfaction but just criticisms. Most of the jobs we perform are also around making judgements. I could sense that there is a difference between decisions and judgements; and also that judgments we make are subject to change depending on which side of the story is known to us. But I am finding it hard to decide without judging.

I will be grateful if someone could teach me how do you make decisions without judging. Are they referring to perceptions / prejudice when they talk about judgement? I am not sure. Or do they mean that you should not judge people but you can judge ideas, actions, results and facts?

I am not looking for another dose of philosophical response. What I need is techniques!!! Can anyone help me?

Thursday, October 20, 2011

Interesting people....

I met an impressive person yesterday. She was so dynamic, enthusiastic, energetic and knowledgeable. It was very interesting to watch her talk about her career progress and what made her successful. She was above 50 and has grandchild(ren). When you see her speaking, you would feel the energy levels of a teenager... Wow..... I could immediately connect with her; that is how all of us in the auditorium felt....

I have had impressive bosses in the past. They were not so vocal or bubbly. But I see quite a number of things in common...

1. They all (including her) respect & willing to trust the other person; they are trustworthy
2. They are passionate about what they do
3. They are confident that grooming others will only help them grow higher & it is not a threat to groom their successor
4. They adapt to changes quickly – in fact they welcome change
5. Most importantly, they are honest but not 'braggy' about any of these
6. They understand and accept that one can make mistakes...

You know, these qualities are contagious... if you are with them for some time, you would see that your thoughts, speech and actions change for good. It is rare to get such people around you; the best you can do is, you develop these qualities... you would see that people around you change :-)

Sunday, October 16, 2011

திருப்பூந்துருத்தி...

திருப்பூந்துருத்தி எனும் பாலகுமாரன் கதை நேற்றும் இன்றும் முழுதாய் எனை ஆட்கொண்டது. 1990 -லிருந்து நான் பாலகுமாரன் கதை படித்தாலும், அவரது எத்தனையோ ஆன்மீக கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இந்தக் கதை மனதைச் சுட்டது. இதே கதை போன வருடம் படிக்கும் போது இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஒரு வருடத்தில் நடந்த நிகழ்சிகளின் விளைவாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தலோ இன்று ஏதோ ஒரு நெகிழ்வு...

கொஞ்சம் ஏக்கமாகக்கூட இருக்கிறது, இது போல, ஒரு குரு நம் கண்முன் தோன்றி, நம்மை வழிப்படுத்தமாட்டாரா என்று. சலனம் இல்லாதிருத்தல் என்பது எனக்கு ஒரு கருத்தாகப்புரிந்தாலும், நடைமுறைப்படுத்தலில் உள்ள குழப்பங்களை, சிக்கல்களை எளிதாக்கத் தெரியவில்லை; எப்படி சமாளிப்பது என்ற தெளிவுமில்லை. அவர் சொல்வது போல, இறை தன்னை உணர்த்த நினைக்கும்வரை காத்திருப்பது ஒன்றுதான் வழி போலும்...

உங்கள் வீடுகளைச் சுத்தமாக்கி, வாசனையாக்கி, ஜன்னல்களைத் திறந்துவையுங்கள், ஒரு நாள், தென்றல் உங்கள் வீட்டுக்குள்ளும் வரலாம் என்றொரு வாக்கியம் உண்டு. கோபமின்றி, வெறுப்பின்றி, அஹங்காரமின்றி, காமமின்றி, பொறாமையின்றி, பொய்யின்றி, பேராசையின்றி, எனது என்ற ஆளுமை எண்ணமின்றி, இவையில்லாமல் இருக்கும் கர்வமின்றி மனவீட்டைச் சுத்தமாக்க இயலுமா? மலைப்பாக இருக்கிறது. ஒரு குருவால் ஒரு நொடியில் இவை அனைத்தையும் துடைத்தெறிய இயலும் என்று பாலகுமாரனும், இன்னும் சிலரும் கூறினாலும், அவரவர் வினையை அவரவர்தானே களையவேண்டும் என்று எண்ணமே மேலோங்குகிறது. விவேகானந்தருக்கு ஒரு இராமகிருஷ்ணர் போல நமக்கும் ஒருவர் கிடைப்பார், சரியான நேரத்தில் வருவர் என்று சொன்னாலும், விவேகானந்தர் எத்தனைப் பிறவிகளாக தன்னைச் சுத்தம் செய்தாரோ இந்த பிறப்பில் ஒரு இராமகிருஷ்ணர் கிடைக்க என்றுதான் தோன்றுகிறது.

திருப்பூந்துருத்தியில் மணி என்றொரு தொழிலதிபர் தன் தந்தையின் மரணத்துக்கு முன், அகவிழிப்பு பெறுகிறார். அதன் பின்னர் அவர் சங்கரர் போல பிற உடல்களுள் நுழைந்து அவர்கள் வாழ்வையும் சரியாக்கி, தானும் வாழ்வை உணர்ந்துகொள்கிறார்; சாதாரண மனிதர்களின் வாழ்வில் சரியான மாற்றங்களை உண்டாக்குகிறார். இப்படி ஒருவர் நம் வாழ்விலும் வந்து நம்மையும் சரியாக்கினால் எப்படியிருக்கும் என்ற எண்ணமும் எழுகிறது; மணியைப் போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடைய மனமும் விழிக்காதா என்ற எண்ணமும் எழுகிறது. யார் சொல்லக்கூடும் எது நிகழும் என்று? என் தகுதி என்னவென்று?

Wednesday, October 12, 2011

Karma Clearing program - how successful was this?!?!?

Hmmm.... I started this with a lot of enthusiasm. On the first day itself, I broke the first two - no criticism and no expression of dissatisfaction. On any day there were only two or three rules followed; if a rule was followed one day, the next day it got broken.

The only thing I was able to follow was to observe thoughts and actions on all days consistently. I realized that, only if you try to follow the rules on all days of your life, eventually you would become successful in one of the programmes started on a new moon day!!!

Action no 1, 2 and 6 are the most difficult!!! 1 and 2 are broken on all days consistently!!! Finding an action that suits 6 was difficult; not because I like all activities but because my ego resists something to be called as disliked activity.

Let me try these three on all days.... and see how it is after about six months from now!!!

Tuesday, September 27, 2011

Karma Clearing program

I am trying to follow nine day Karma Clearing program from today as today is new moon day. There are nine rules to follow every day

1. No expression of dissatisfaction
2. No criticism
3. Observe actions and thoughts
4. Arise earlier
5. One major meal a day
6. Do something that you dislike
7. help some one without leaving a trace
8. meditate once at least before sunset.
9. recall the day in reverse at bed time (starting from bed time and traversing through to dawn)

Will log the progress everyday in my excel tracker and put it in the site after the program completion.